புதன், 7 செப்டம்பர், 2011

வெண்பா எழுத முடியுமா?


வெண்பா எழுத முடியுமா?
வெண்பா எழுதுவது ரொம்பக் கடினமில்லை
கண்பார்த்தே யாத்துவிடலாம் – நண்பனே
சீர்தளை பற்றிக் கவலைப் படாமல்
நேராய் இதுபோல் எழுது.

விவசாயிக்கான வெண்பா...
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவரா? – அழுதுண்டே
ஏக்கருக்கு நூத்தியஞ்சை எண்ணிப்பார்த் தாதெரியும்
ட்ராக்டருக்கு வள்ளுவனாரே.

ராத்திரி தூக்கம் வராத பெண்களுக்காக எழுதப்பட்டது இந்த வெண்பா....
அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்றுப் புரவி
கயிருருவிப்போச்சோ – இரவிதான்
செத்தானோ வேறுவழிச் சென்றானோ பேதை எனக்(கு)
எத்தால் விடியும் இரா.
 நன்றி;  
ஆகாசம்பட்டு சேஷாசலம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!