வியாழன், 22 செப்டம்பர், 2011

என் தோழி!

 
நீ என் தோழி
எனது ஆன்ம பலத்தின்
உந்து விசை
உனது வருகைக்கு
என் இதயவாசல்
தானாகவே திறந்து கொள்கிறது
சூரியன் இல்லா
நிலத்தைப் போல
நீ இல்லாவிட்டால் – என்
மனம் என்ற நிலம்
மணக்காமலேயே போய்விடும்.
பூவைச்சும்ப்பதால் மணக்கிற
கூடையைப் போல
அன்பே!
உன்னை நினைப்பதால்
நான் மணக்கிறேன்!
சில நேரங்களில்
உனது நினைவைப்
போர்த்திக் கொள்வதால்
போர்வையைத் தேடாமலேயே
தூங்கி விடுகின்றேன்.
நித்தம் உன்னைக்
காணாவிட்டாலும் – உன்
நினைவையே
நேசித்துக் கொண்டிருப்பேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!