திங்கள், 24 அக்டோபர், 2011

ஏன் மயக்கம்?


பூக்களுக்கு சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு-
புன்னகையை கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – நான்
தூரத்தில் இருந்தால்தான் உனக்கு
புன்னகையே வரும் என்று!
படைத்தவனுக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு பார்க்கக் கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரையும் பார்க்கிறாய் என்று!
பைங்கிளிக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு –
பேசக் கற்றுக் கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரிடமும் பேசுகிறாய் என்று!
ஏன்?
என்னைக் கண்டதால் மயக்கமா?
உன்னை இழந்து விடுவாய் என்ற
தயக்கமா?



2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

நல்ல கவிதை!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கருத்திற்கு நன்றி ஞானசேகரன்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!