வியாழன், 29 டிசம்பர், 2011

கனவும் நினைவும்


 
காண்கின்றேன் கனவுகளை

சுமக்கின்றேன் நினைவுகளை

கனவுகளே நினைவானால்

களிப்படையும் நெஞ்சமெல்லாம்

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

மறந்தாலும் மறைவதில்லை

நெஞ்சுருக வேண்டுகின்றேன்

நினைவே நீ மறைகவென்று!

கண்ணீருடன் கதறுகின்றேன்

கனவே நீ கலைகவென்று

மனிதனாகப் பிறந்துவிட்டேன்

மனம் குழம்பித் தவிக்கின்றேன்-இந்த

மண்ணுலகக் கொடுமையெல்லாம்

மாளும் வரை பொறுத்திருப்பேன்.




மறக்கமுடியாத நினைவுகளுடன்,

7 கருத்துகள்:

சசிகலா சொன்னது… [Reply]

மிகவும் அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

பொருத்துக்க வேண்டியதுதான் மனிதனின் தலைவிதி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

நல்லதொரு கவிதை....

புதிய ஆண்டில் உற்சாகமாய் செல்லுங்கள் நண்பரே...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருக்கைக்கும் கருத்திற்கும் தங்களுடைய இணையதள அறிமுகத்திற்கும் நன்றி HOTLINKSIN.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும், பாராட்டிற்கும், புத்தாண்டு வாழ்த்திற்கும் நன்றி கவிதைவீதி சௌந்தர் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இரத்னவேல் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!