சனி, 24 டிசம்பர், 2011

எம்.ஜி.ஆர். ஒரு புதிர்


எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி!

திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர். 'தனது பாணி' என்று தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக்கொண்டால் அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.

அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே! தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்தபோது, 'நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது' என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலிலேயே தி.மு.க.வை தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார்!

பிறகு இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக்கொண்டு வாகை சூடியவர் அவர்.

ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகும் அவருக்கு பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் வெடித்ததையும் எதிர்கொண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும், கட்சித்தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள்முன் வெறும் செல்லாக்காசாக்கிக்காட்டினார்.


அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்டபோதும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அவர் சொல்ல மறுத்தார். 'தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசு அரசியல் நியமிக்க என்று சொல்லாமல் சொன்னார்.

இதையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு புதிர், அவர் ஒரு தனி சாதனையாளர், அவர் ஒரு அதிசயம் என்றுதான் எடைபோட முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன? உண்மையில் யுகப்புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப்போல, அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.

உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். தோன்றமுடியாது!

{1987 ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது 03.01.1988 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம் இது)

மறக்கமுடியாத நினைவுகளுடன்,

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது… [Reply]

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ரத்னவேல் அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!