வெள்ளி, 23 டிசம்பர், 2011

நினைவெல்லாம் நீதானடி!



பேசத்துடிக்க விழைகின்றேன்
பேய் போல் மனத்தால் அலைகின்றேன்
எங்கு நோக்கினும் உன் உருவம்
எண்ணும் எண்ணத்தில் உன் வடிவம்!
தினம் தினம் உன்னைப் பார்ப்பதினால்
தேகத்தில் ஏதோ உணர்வலைகள்
ஏனோ எனக்கே புரியவில்லை
என்னால் இயம்ப முடியவில்லை!
உறங்கத்துவங்க முயல்கின்றேன்
ஊரும் உறங்கிய பின்னாலே-உன்
நினைவை மறக்க முயல்கின்றேன்
நிலை தடுமாறி விழுகின்றேன்!
சொல்லத் தெரியா நிகழ்சிகளில்
சொக்கிட வைக்கும் கனவுகளில்
சுகமாய் உன்னுடன் வாழ்கின்றேன்-அதில்
சோகம் கொஞ்சம் ஒழிக்கின்றேன்.


4 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது… [Reply]

நன்றாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரரே.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சசிகலா சொன்னது… [Reply]

அருமை

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வந்து வாழ்த்தியமைக்கு நன்றி கோவைக்கவி (வேதா.இலங்காதிலகம்) அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சசிகலா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!