வியாழன், 13 டிசம்பர், 2012

போர்க்களமான வீடு!

வாழ்க்கைப் போராட்டங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தரும் அனுபவம் விசித்திரமானது. எத்தனையோ படிப்பும் பதவியும் இருந்தாலும் கூட மனசுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகள் என்பது யாராலும் அறியமுடியாத ஒன்று. ஒருவருக்கு சரி என்று படுகிற விஷயம் அடுத்தவருக்கு தவறாகப் படுகிறது. பெற்றோர்கள் அவர்களின் கடமையைச் செய்ய தவறும்போது, எவ்வளவு நாள்தான் மனசுக்குள் புழுங்கித் தவிப்பது? ஆறுதலான ஒருவன் கிடைக்கும்போது அவன் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மீது நம்பிக்கை வந்துவிட்ட பிறகு இதில் யார்தான் என்ன செய்துவிட முடியும்?

கடிதத்தை தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கும் விஷயம் புரியும்!

சரிவீட்டுப் பிரச்னைக்கு வரேன். முடிஞ்ச வரைக்கும் சுருக்கிடறேன். போன வருட மே மாசம். என் பி.பி.ஏ பரீட்சைக்காக பத்து நாள் லீவ் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். முதன்முதலா அன்னிக்குதான் புக் எடுத்தேன். பத்து மணி இருக்கும். சாந்தி பக்கத்துல வந்து உட்கார்ந்தா (மூத்த சகோதரி - ஆசிரியரா பணி செய்யறவங்க). அப்பா மெட்ராஸ்ல இருந்தாங்க. வீட்ல அம்மா, தம்பி, புவனா, நான்.

'இந்தா மாலு…. நீ என்ன சொல்றன்னா?

எதுக்குன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே புரியலை எனக்கு.

'அடுத்த மாதம் அது ஃபாரின் போகுதாம்

அதுக்கென்ன?

கல்யாணம் பண்ணனும்ங்குது!

யாரை?.....

………………………. பதிலில்லை.

என்ன சொல்ற? புரியற மாதிரி சொல்லு.

ஸ்கூல்ல எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டேயிருக்காங்க. அதுக்கும் விசா வந்திடுச்சி. அதுக்குள்ள முடிக்கனும்னு தான்…………

ஆர்.டி.எக்ஸ் குண்டைத் தலைல போட்ட மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
நல்லா யோசிச்சுதான் பேசறியா?


'ஆமாம், எனக்கும் வயசு அதிகமாயிருக்கு. வீட்ல சொல்றாங்கன்னு யாரையாச்சும் கல்யாணம் பண்ணி, நாளைக்கு குழந்தை குட்டி இல்லன்னு பிரச்னை வந்தா என்ன பண்றது? இவருக்கு எல்லா விவரமும் தெரியும். ஜாதிப் பிரச்னையைத் தவிர வேறோன்னுமில்ல' அப்படின்னு சொன்னா.

இதுதான் உன் கடைசி முடிவுன்னா இதை ரெண்டு வருஷம் முன்னாடியே செஞ்சிருக்கலாமே! பட்ட அவமானங்களாவது குறைஞ்சிருக்கும்.

மேரேஜ் பண்றதுன்னு இப்பதான் முடிவு பண்ணேன்.

இப்ப திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

……………………….. பதிலில்லை.

ஐந்து நிமிடம் யோசனை பண்றமாதிரி திகிலடிச்சி உட்கார்ந்திருந்தேன். அதுக்குள்ள அம்மாவும், என்ன பேசிக்கறோம்னு புரியாம அலைபாயறாங்க!

உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் அனுபவசாலி இல்ல. இருந்தாலும் சொல்றேன். இது உன்னோட மட்டும் போற விஷயமில்ல. எல்லோரையும் பாதிக்கும். அடுத்தடுத்து மானம் போகிற சம்பவங்கள் நம்ம வீட்ல நடந்துகிட்டேதான் இருந்திருக்கு. அதுக்கும் மேல நீயும் இப்படின்னா ஜீரணிக்க கஷ்டமாயிருக்கு. சுதா சொல்லாமப் போச்சு. நீ சொல்லிட்டுப் போற, அதான் வித்தியாசம்னேன். கடகடன்னு... அழுதா!

நீ கல்யாணம் பண்றத நான் வேணாம்னு சொல்லலை. உனக்குன்னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா வேணும். ஆனா ஆளை கரக்ட்டா செலக்ட் பண்ணு. அவன் பேஸிக்கலா ஒரு அடியாள். கூலி கொடுத்தா கொலையும் பண்ற மாதிரி. நாளைக்கே உன் காசுதான்னு முக்கியம்னு எல்லாத்தையும் பிடுங்கிட்டு உன்னைக் கொன்னுட்டாஎன்ன பண்றது?

'அப்படியெல்லாம் கிடையாது'.

அப்புறம் உன் இஷ்டம். மேரேஜ் எப்படி பண்ணனும்? சிம்பிளாவா….? மண்டபத்திலா?

மண்டபத்தில. எல்லோருக்கும் சொல்லித்தான். ஒரு வாரத்துல கூட முடிச்சிடலாம். எல்லாத்துக்கும் ஆளிருக்கு.

நான் எதுவும் பேசலை. அம்மாவைக் கூப்பிட்டு சொன்னேன். ரியாக்ஷனைக் கேக்கனுமா? அழுகையும் சத்தமுமா இருந்தாங்க! பாட்டில் விஷம் வாங்கி எல்லோருக்கும் கொடுத்துட்டுப் போன்னாங்க. நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அவ தீர்க்கமா முடிவு பண்ணிட்டா.  நம்மகிட்ட பர்மிஷன் கேக்கலை. நியூஸ்தான் சொல்றா. நீ என்ன சொல்றேம்மான்னேன்.

நீ என்ன அவளுக்கு உடந்தையான்னு கேட்டாங்க! எனக்கு ரொம்ப கோபம் வந்துட்டு, கன்ட்ரோல் பண்ணிகிட்டு... ஆமாம்னு வச்சுக்க. என்ன சொல்ற?

நாங்க செத்தாக் கூட முகத்துல முழிக்கக்கூடாது. இந்த தெருவுல இருந்து காலி பண்ணிட்டு ஒரேயடியா போகச்சொல்லுன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அவ யோசனை என்னன்னா... கல்யாணம் பண்ணியும் இங்கேயே இருக்கிற மாதிரி. அந்த ஆள் ஃபாரின் போற மாதிரி.

அதுக்கு எதுக்கு இப்படி ஒரு அவசரமான கல்யாணம்? நிதானமா யோசிச்சு முடிவெடுன்னு சொல்லிட்டேன்.

அன்னிக்கு நைட் நானும் அம்மாவும் கிளம்பி பெரியக்கா வீட்டுக்குப்போய் அத்தானிடம் சொன்னோம். அவர் வந்து பேசினார். ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை. நான் அவரை தடுத்து அனுப்பிட்டேன். இழவு வீடு மாதிரி இருந்தது. பதினைஞ்சு நாள் கழிச்சு பார்த்தா, அந்த ஆள் ஃபாரின் போய்ட்டான். இவ யாரோடும் பேசாம.... கிட்டத்தட்ட போர்க்களம் மாதிரி இருந்தது வீடு!

கடிதக் கனவுகள் தொடரும்....

4 கருத்துகள்:

ஆத்மா சொன்னது… [Reply]

அழகாகவும் ரொம்ப சுவாரஷ்யமாகவும் இருக்கிறதே.
ரொம்ப பதிவுகளை மிஸ் பண்ணிட்டோமோ.. :(

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆத்மா! முதல்முறை வருகை தந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நேரமிருப்பின் அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு கருத்துக்களைக் கூறுங்கள்.

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

​interesting... continue

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உஷா அன்பரசு,

நன்றிங்க!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!