ஞாயிறு, 8 ஜூலை, 2012

பாராட்டு மழை!



எனது சில பழைய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருந்தேன். அது குறித்து எனது நண்பர்கள் இருவர் எழுதிய பாராட்டுக் கடிதங்கள் இரண்டு கண்ணில் பட்டது. மறக்க முடியாத நண்பர்களின் கடிதம் அல்லவா? அதையும்தான் பதிவில் கொண்டுவரலாமே!


எனது சகோதரி ஜெயந்தியைப் பற்றி இந்த இடுகையைப் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். எனது கவிதைகளைப் படித்துவிட்டு அவர் எழுதிய சிறு விமர்சனத்தையும், என் பால்யகால நண்பன் ஈஸ்வரன் எழுதிய சிறு கடிதத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.

 
கல்லிலே உளி கொண்டு சிலை வடிக்கும் அற்புதக் கலைஞன் போல் சொல்லிலே ஒளி கொண்டு கவி படைக்கும் கவிஞன் இவரைப் பாராட்டுகின்றேன். பல விதமான துறைகளில் முன்னேறியிருக்கும் நமது நாட்டில் ஆண்-பெண் நட்பு என்றாலே அது ஒரு கிசு கிசு. அன்பிற்காக ஏங்கும் இதயத்திற்கு நல்லதொரு நம்பிக்கை வேண்டும். மனதிற்கு தெளிவான அறிவுறை கூறும் நட்பு யாருடையதாக இருந்தால் என்ன?

நல்ல கருத்துப் பரிமாறல்கள் தோழக்கு தோழன், தோழிக்கு தோழி என்றில்லாமல் தோழனுக்கு தோழியுமாக கலந்து பேசலாம். பேசுவதெல்லாம் காதலாகிவிடாது. ‘இளமைக்குச் சாபமோஎன்று கவிதை அமைத்திருக்கும் இவருக்கு நல்லதொரு நட்பை ஆண்-பெண் பேதமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஆர்.ஜெயந்தி.


அன்புள்ள நண்பனுக்கு, உன்னுடைய இரண்டு கடிதமும் அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றேன். பதில் எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும். கவிதை எழுதுவதில் உனக்குள்ள ஆர்வம் எனக்கு பொறாமையாகவும், பெருமையாகவும் இருக்கிறது. உனக்கு வீட்டிலும் சரி, அக்கம் பக்கத்திலும் சரி எந்தவொரு ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இல்லாமல், தன்னைத்தானே ஊக்குவித்துக்கொண்டு தான் சிறந்த கவியாக வேண்டும், எழுத்தாளனாக வேண்டும் என்ற முயற்சி உன்னைத்தவிர நம்மவர்களில் யாருக்குமே கிடையாது. I felt extremely happy, when I received your Invitation.

அம்மா உங்க வீட்டிற்கு வராத காரணம் நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாயோ அது சரியாகிவிட்டது. உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். யார் என்ன சொன்னாலும் சரி, என்ன பேசினாலும் சரி எக்காரணம் கொண்டும் நம்முடைய நட்பு பிரியக் கூடாது. அது தொடர வேண்டும். Under any circumstances, whatever the cause be, I need your friendship, I want your friendship because I like your friendship.

இப்படிக்கு,
ஈஸ்வரன்.

தொடர்புடைய கவிதைகளின் இடுகைகள் -
சொல் நிலவே!

நட்புடன்,

2 கருத்துகள்:

சசிகலா சொன்னது… [Reply]

நண்பர்களின் பாராட்டே சிறந்த வெகுமதி அது தங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தோழி சசிகலா!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!