செவ்வாய், 10 டிசம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது... கருணாநிதி



அப்போது நான் எஸ்.டி. சுந்தரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கோவையிலிருந்து என் உறவினர்கள் சென்னை வந்தவர்கள், படப்பிடிப்பு ஏதாவது பார்க்கவேண்டும் என்றனர். எஸ்.டி.எஸ். தயாரித்த படம் வாஹினியில் எடுக்கப்பட்டதால் அந்த அனுபவத்தை வைத்து என் உறவினர்களை வாஹினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றேன்.
 
அப்போது மக்கள் திலகம்தாய் மகளுக்குக் கட்டிய தாலிபட்ப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மக்கள் திலகத்தின் காதல் காதல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைப் பார்க்க என் உறவினர்களை அழைத்துச் சென்றேன். ‘எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடிக்கிறார். அதனால் படப்பிடப்பைப் பார்க்க வெளியார் யாரும் அனுமதிக்கக் கூடாது என்று நொல்லியிருக்கிறார். எனவே உள்ளை அனுமதிக்க முடியாதுஎன்று தயாரிப்பு நிர்வாகி கூறிவிட்டார்.

துரதிஷ்டவசமாக அன்று வாஹினியில் வேற் எந்த படபிடிப்பும் இல்லை. புரட்சித்தலைவரின் படபிடிப்பு ஒன்றுதான் நடந்தது. அதிலும் அனுமதி இல்லை என்றவுடன் எனக்கு ஒருபக்கம் வேதனை, மறுபக்கம் அவமானம். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சமயம் எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் தெரிவித்தேன்.

அவரும் வணக்கம் தெரிவித்துவிட்டு என்னைத் தெரிந்தவர் போலஎன்ன சௌக்கியமா? என்றார். ‘நல்லாயிருக்கேன்என்றேன் நான். பின் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். ஊரிலிருந்து தங்கள் படபிடிப்பைப் பார்க்க வந்திருக்கிறார்கள்என்று தெரிவித்தேன்.
‘’பார்க்கலாமே! உள்ளே கூட்டிப்போங்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அவ்வளவுதான், என் உறவினர்களை உள்ளே கூட்டிச் சென்று படபிடிப்பைக் காட்டினேன். தயாரிப்பாளர் எனக்கும், என் உறவினர்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை காட்டினார். நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருங்கியவன் என்ற நினைப்பு அவருக்கு.

அன்றுதான் நான் முதன் முதலில் புரட்சித்தலைவரை முதன் முதலாக சந்தித்துப் பேசியது. அதன் பின்னர் விஜயா கார்டனில் ஒரு விழா. ஒரே நட்சத்திரக்க்கூட்டம். நானும் போயிருந்தேன். அந்த விழாவிற்கு புரட்சித்தலைவரும் வந்தார். வழியில் நின்ற என் முதுகில் யாரோ தட்டுவது தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். புரட்சித்தலைவர்தான் என் முதுகைத் தட்டியவாறே உள்ளே சென்றவர் என்னைப் பார்த்து, ‘’ என்ன சௌக்கியமா?’’ என்றார். அவரது நினைவாற்றலை யினைத்து என்னுள் நானே வியந்து கொண்டேன்.

அவர் அப்போது குடியிருந்த லாயிட்ஸ் சாலையில்தான் எஸ்.டி.எஸ். புரோடக்ஷன்ஸ் அலுவலகமும் இருந்தது. காலை நேரத்தில் நான் வெளியே நிற்பதுண்டு. அப்போது அவ்வழியே காரில் போகும்போதெல்லாம் கையை ஆட்டி என்னைப் பார்த்து சிரித்தவாறே செல்வார். அது சமயம் என் மெய் சிலிர்க்கும். நானோ மிகவும் சாதாரணமானவன், அவரோ மிகவும் பிகழ் பெற்றவர். மிக எளியவர்களிடம்கூட அவர் காட்டும் பரிவை எண்ணி நான் இன்று கூட வியப்பதுண்டு.

நாடோடி மன்னன் படம் வெளியிடுவதற்கு முன்பு; பெரிய தலைவர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு அதை போட்டுக்காட்டினார் மக்கள் திலகம். என் குரு எஸ்.டி.எஸ். என்னையும் அந்தப் படத்தைப் பார்க்க கூட்டிச் சென்றார். படம் தொடங்குவதற்கு முன்னர் எஸ்.டி.எஸ்.ஸிடம் எம்.ஜி.ஆர். பேசிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின்னர் தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எஸ்.டி.எஸ்.

‘’அவரை எனக்குத் தெரியுமே!’’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போது அவரது உயர்ந்த பண்பை நினைத்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.

சோ. கருணாநிதி.


2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

Really ur grade!
+1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

என்னே தலைவரின் உயர்ந்த பண்பு...!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!