வெள்ளி, 13 ஜனவரி, 2012

தமிழர் திருநாள் வாழ்த்து



பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் திரு.பால சண்முகம் அவர்கள் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து இது. இதை நான் இங்கு பகிர்வதோடு என் வலையுலக நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்தாய் தெரிவிக்கிறேன்.


அன்பிற்கினியீர்,

நலிந்து கிடக்கும் சமுதாயத்தின்

குறைகளைத் தவிர்க்க

மனிதகுலம் சிறக்க,

மக்கள்தம் மனதில்

சுயநல எண்ணம் மறைந்து

போராட்ட உணர்வு பொங்க,

கண்மூடிப் பழக்கங்கள் 

மண்மூடிப் போக

பகுத்தறிவு சிந்தனை பொங்க,

சாதிமத உணர்வுகள் மறைந்து

ஒற்றுமை உணர்வு பொங்க,

செந்தமிழ் திருநாளில்

உளமாற விரும்பி தெரிவிக்கின்றேன்

பொங்கல் நல்வாழ்த்தினை.

மறக்க முடியாத நினைவுகளுடன்,

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

உங்கள் நண்பர் அனுப்பிய வாழ்த்தினைக் கண்டு
எனக்குள் அந்த பழைய இனிய பொங்கல் நாட்கள்
பொங்கலாய் பொங்குகிறது.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிப்பிரியன் !

Unknown சொன்னது… [Reply]

வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் இல்லாமல் இப்படித்தான் இருக்கவேண்டும் பொங்கல் வாழ்த்து!

தங்களுக்கு என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் கவிப்ரியன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரவாணி அவர்களே! உண்மைதான் பொங்கல் நினைவுகள் மட்டுமல்ல எல்லா பழைமையான நினைவுகளும் இனிமையானவையே! தங்களுக்கும் என் உளம்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்,கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!