உணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2013

என் இனிய ஸ்நேகிதிக்கு....


இது அன்பா? அடிமைத்தனமா? எனக்கு உன்னைத் தவிர வேறு ஸ்நேகிதிகள் இருந்தால் பொறாமைப்படுவியா? உனக்கு என்னைத் தவிர வேறு ஆண் நண்பர்கள் இருந்தால் காழ்ப்புணர்ச்சி வருமா? நான் சாதாரண நலம் விசாரிக்கும் பல தோழிகளைப் பெற்றிருந்தாலும் உன்னுடன் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கமான நெருங்கின நண்பனாக இருக்க விரும்புகிறேன்.

இது அன்புக்கட்டுப்பாடா? இல்லை என்னுடன் மட்டுமே நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற அடிமைத்தனமா? புரியவில்லை. பெண்கள் பொதுவாய் தன்னுடையவனை அடுத்தவருக்கு விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அதுபோல நாங்களும் இருக்கக்கூடாதா என்ன?

பெண் அண்மை, பெண் வாசனை என்னவென்று 27, 28 வயதில் எனக்கு உணர்த்திய அந்த முதல் தோழியைப் பற்றி சொல்லவா? என் அந்த வயது வரை என் நிலைமை என்ன தெரியுமா? இப்போது உன் புலம்பலைப் போலத்தான் அன்று என் நிலைமை!

என்னடா செய்யனும் உன்னை? ப்ளீஸ் அது மட்டும் வேண்டாம். என்னக் கட்டிக்கோ. இறுகித் தழுவிக்கோ! உனக்கு இந்த அளவுக்காவது நான் ஆறுதல் கொடுக்கலேன்னா நான் என்ன நெருங்கிய தோழி?



‘கற்பு பற்றி எனக்கு கவலையில்லை. அதனால எனக்கு கற்பு போயிட்டுதா நான் நினைக்கலை. ரொம்ப கஷ்டமாயிருந்தா "அந்த மாதிரி" பொண்ணுங்க கிட்ட போயிட்டுவா. ஆனா இதுக்கு மட்டும் என்னக் கூப்பிடாதே! என் புருஷனுக்கு நான் முழுசா போகணும்’. ஏனோ இது மட்டும் ஒப்பலைடா. அப்படி கண்டிப்பா நான் வேணும்னா ஜடமாய்த்தான் நான் வருவேன். அன்னிக்கே என் மனசிலே இருந்து உங்களை தூக்கி எறிஞ்சிடுவேன்.

என்னவோ எனக்கு அது அசிங்கமா படுது. அந்த அசிங்கம் என் புருஷனோட போகட்டும். இந்த தமிழ்ப்பண்பாடு உம்புல மனசுல ஊறிப்போய்க் கிடக்கு. ப்ளீஸ்… என்னைக் கம்பல் பண்ணாதீங்க. ஒரு வேளை என் வாழ்க்கை பாழாப்போச்சின்னா நிச்சயமா உன்கிட்ட வருவேன். அப்போ என்னை ஏத்துக்குவியா?!

என் தவிப்பு தெரிந்து  இந்த அளவுக்காவது எனக்கு ஆறுதல் கொடுக்கிற அவள் தேவதையாய்த் தெரிந்தாள். தவிப்பு அடங்க கட்டிக்கப்போய் எரிகின்ற கொள்ளியில் எண்ணை வார்த்தது போல நான் கொதித்து அடங்கி நொந்து போனேன்.

என் வேகம் தெரிந்து தன்னையும் காத்துக்கொண்டு என்னையும் முழுசாய் அனுப்பிவைத்தாள். இந்த போக்கிஷம் எனக்கில்லையோ என்று பல நாள் அழுதிருக்கிறேன். ஏங்கியிருக்கிறேன். சில நேரங்களில் என்னை எரிச்சலூட்டியிருக்கிறாள். என்னுடன் முரண்பட்டிருக்கிறாள். ஆனால் அதே சமயம் தான் காதலித்தவனோடு விரல் நகம்கூட படாமல் பழகியவள் என்னைக் கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.

அப்படி ஒருநாள் ‘இந்த’ ஆறுதலுக்கு நான் "நன்றி" சொன்னப்போ, எதுக்குன்னு கேட்டாள்.

எனக்காகவா? என் அன்புக்காகவான்னு நான் கேட்டப்போ….

இல்லை…. ‘எனக்கும் தேவையாயிருந்திச்சின்னு’ ஒளிவு மறைவில்லாமல் சொல்லி அதிர்ச்சி வைத்தியமும் செய்திருக்கிறாள்.

‘உணர்ச்சிகளே மரத்துப்போச்சின்னு நினைச்சிருந்ததை நீங்க புதுப்பிச்சிருக்கீங்கன்னு’… என்று சொல்லி என்னை யோசிக்க வைத்திருக்கிறாள். அவளை நேசித்ததின் விளைவுதான் இன்று சகலரையும் நேசிக்க வைக்கிறது. காதல் உணர்வுகள் என்ன என்பதும், பெண்ணை புரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அப்போதுதான். அது முதலே ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் கோணத்திலேயே என்னைப் பார்க்கச்செய்தது.

அவளை நான் மதித்ததும், அவள் என்னை மதித்ததும் இன்றும் நினைத்தால் மனதில் பசுமையாய் இருக்கிறது. அவள் தோழிகளையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி, என்னைப் பற்றி உயர்வாய்ச் சொல்லி… ‘நீ கொடுத்து வச்சவடி’ உனக்கு நல்ல நண்பர்களாகவே அமையறாங்கன்னு சொன்னதையும் வந்து சொன்னாள்.

என் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் தன் குடும்பத்தோடு தோழிகளையும் மறக்காமல் அழைத்து வந்திருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் இவள் மட்டும் எல்லோரையும் அனுப்பிவிட்டு என்னுடன் பேச காத்திருந்தாள். சற்று முன்பு வரை கலகலப்பாக பேசியவள் என்னிடம் பேச வந்ததும் ஓவென்று அழத் தொடங்கி விட்டாள்.

அழுகையை நிறுத்தி, சமாதானப்படுத்தி என்னவென்று கேட்டால்… அவளோட ஆள யாரோ ஒரு பொண்ணு வந்து கல்யாணம் பண்ணி சொந்தமாக்கிக்கப் போறாளாம். 

நான் சிரிப்பதா? அழுவதா? என்ன செய்திருப்பேன் சொல் பார்க்கலாம்?

இப்பக்கூட சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… நான் ரெடிப்பான்னு… நான் நிஜத்தையே ஜோக்காகாகச் சொல்லித்தான் அவளைச் சிரிக்க வைக்க முடிந்தது.

உண்மையில் அவளைக் கல்யாணம் பண்ணிக்க எவ்வளவோ முறை கெஞ்சிப்பார்த்தாயிற்று! என்ன பண்றது? ஜாதி குறுக்கே நிக்குதே?! அதுவுமில்லாம அவள் அவளுடைய பெற்றோரிடத்தில், நீங்க பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு கொடுத்திருக்காளாம்.!???



நம்ம நட்பு என்னைக்கும் தொடருமா?

எனக்கு நம்பிக்கை இல்லை! நட்போ காதலோ எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பின்னாளில் பாத்துக்கவும் முடியாது. பார்த்தா அதிகம் பேசவும் முடியாது. கணவன் சந்தேகப்படுவான் என்பது ஒரு காரணமா இருந்தாலும், நேரம் இருக்காது.

வாழ்க்கையே யந்திரமாய் மாறிப்போய், கணவன், குழந்தை, வீடு, வேலைன்னு சிந்தனை அதைச் சுற்றியே இருக்கும்போது பழைய காதலையோ, நட்பையோ நினைச்சு அப்போ பூரிச்சி போகவும் முடியாது. ஒண்ணஓட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடவும் முடியாது.

ஆனா நட்பு மறக்காது. எப்பவாது நினைச்சுக்குவேன். நீங்க செஞ்ச உதவி, எனக்கு கொடுத்த மதிப்பு, சந்தோஷம் எல்லாத்தையும்….

வாழ்க்கை எனும் சூறாவளி நம்மை சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது. இன்று யார் யாரோ நம் அருகில். ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு உறவுகளும் நண்பர்களும். இவர்களும் நாளை காணாமல் போகலாம். மீண்டும் புதிய உறவுகள்…..


கல்யாணம் பெண்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்துகிறது? என்னைப்போன்ற ஆண்களை கட்டுப்படுத்துவதில்லையே ஏன்? இந்த தோழி இல்லை என்றால் வேறு ஆள் தேடுவேனா? இல்லை குடும்ப பிரச்னையில் மூழ்கிவிடுவேனா?

என்னைத் தோலுறித்துக் காட்டுவதிலும், சமூகத்தை இந்த வயது வரை உற்று நோக்கி வந்ததன் விளைவாக நான் தெரிந்துகொண்டவைகளை, படித்தவைகளை, அனுபவித்தவைகளை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் உனக்கேதும் சங்கடமில்லைதானே தோழி?....


தேனை மறந்திருக்கும் வண்டும்
ளி சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிறும்
இந்த வையக முழுதுமில்லை தோழி!
என்னை மறந்துவிட்ட நீயும்
என்னால் நம்ப முடியவில்லை தோழி!


இன்னும் இருக்கு….