சனி, 19 ஏப்ரல், 2014

உலகை விலை பேசலாம்



இங்கிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியன். பூமிக்கு வெளிச்சமும், சூடும் பிறந்ததிலிருந்தே வழங்கி வருகிறது. நடுப்பகலில் பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரின் மேலும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் இரண்டு காலரிச் சக்தியை சூரியன் நமக்குத் தருகிறது.

இரண்டு காலரிதானா என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். பூமியின் குறுக்குப் பரப்பைக் கொண்டு அதைப் பெருக்கினால் ஒவ்வொரு நிமிடமும் இருபந்தைந்தாயிரம் கோடி காலரிக்களை நாம் சூரியனிடமிருந்து பெருகிறோம்.

சூரியன் பூமிக்கு அனுப்பும் சக்தி அற்பம். நமக்குக் கிடைப்பதைப் போல இருநூறு கோடி மடங்கு சக்தியை அது எல்லாத் திசைகளுக்கும் அனுப்புகிறது. இவ்வளவு சக்தி பெற்றும் நாம் அதை நேரிடையாக பயன்படுத்துவதில்லை. மறைமுகமாகத்தான் மாற்றுகிறோம்.

மழை நீரும், நிலக்கரியும் சூரியனின் உபயம்தான். நேரடியாக சூரிய வெளிச்சத்தை மின்சாரமாக மாற்ற சோலார் பானல்கள் உள்ளன. இவை மிக மிக ஆற்றல் குறைவானவை. இவற்றைக் கொண்டு நாம் எடுக்கும் மின்சாரத்தின் அளவும் மிகமிகக் குறைவு.

மற்றதெல்லாம் விண்வெளியில் பிரதிபலித்தும், பூமியினை மாற்றி மாற்றி வெப்பப்படுத்தியும் விரயமாகிக் கொண்டிருக்கின்றன.

சூரிய ஒளியை மின்சாரமாக்கும் ஆற்றலின் எண்ணிக்கையைத் தற்போதிலிருந்து ஐம்பது சதவிகிதத்துக்கு அதிகமாக்கும் வித்தை தெரிந்தவர்கள் உங்களில் யாரேனும் இருந்தால் ஒரு புதிய நிறுவனம் தொடங்கி உலகை விலை பேசலாம்.


8 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]


வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தகவலுக்கு மிக்க நன்றி!

தனிமரம் சொன்னது… [Reply]

சிந்திக்க வேண்டிய பகிர்வு விலை பேசலாம்!ஹீ

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனிமரம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

மறைமுகத்திற்கே தாங்க முடியவில்லை...

எனக்கு விரும்பமில்லையாதலால் விலை பேசவில்லை... ஹிஹி...

Unknown சொன்னது… [Reply]

அந்த ஆராய்ச்சி எல்லாம் ஒரு பக்கம் நடக்காமலா இருக்கும் ?
த ம 5

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆனாலும் உருப்படியா எதுவும் பெருசா கண்டுபிடிக்கலயே பகவான்ஜி! வருகைக்கு மிக்க நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!