செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஒரு குறள் – ஒரு கதை



நீல வானில் விண்மீன்களிடையே நிலவு நீந்தி வருதலைக் காணும்போது அந்த அழகை வார்த்தைகளால் காண முடியுமா?

அதே போல் தான் தன் தோழிகளிடையே பருவத்தின் முத்திரைகளை முழுமையாகப் பெற்ற பெண்ணரசிபெழர் அமுதவள்ளி… ‘அமுதாஎன்று செல்லமாக அழைக்கப்படும் ஆணரங்கு! குபுகுபுவென்று பொங்கி மேலாடையைக் குத்திக் கிழித்து விடுவது போல் எழுந்து நிற்கும் அமுத கலசங்கள் கொண்டவள்! காண்போரின் இதயத்தை எளிதில் ஈர்க்கும் கூர்மையான நீள் விழிகள்! அந்நீள் விழிகளில் உருளும் கருநாகப் பழங்களில்தான் அவள் காதலன் சொர்க்கத்தின் திறவுகோள் உள்ளதாகக் கருதினான்!

பனி தூங்கும் மெல்லிய பூவிதழ்களினும் துல்லிய மேனி கொண்ட பாவையவள். இடையினை வளைத்துப் பிடித்து வாரியணைத்த போதெல்லாம் இடை ஒடிந்திருமோ என்று அஞ்சி தடவிப் பார்த்துக் கொள்வாள்!

காதலனின் இரும்புப் பிடியில் சிக்கித்தவிப்பதில் அவளுக்கு சுகம். அப்போது துவண்டுவிட்ட நிலையில் அவன் முதுகை அவள் பூந்தளிர் கைகள் தடவும்! தன் மார்பில் அவள் செப்புக்குடங்கள் புதைந்ததால் தோன்றிய வலிக்கு இதமாக இருக்கும் அவனுக்கு!

கோட்டான் கூவுமுன்னே இணையும் இதழ்கள்கோழி கூவிய பின்னர்தான் வேறு வழியில்லா காரணத்தால் பிரியும்! அதுவரையில் அதர பானத்தை அவள் தர தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள அவன் முயற்சிக்கஇப்படித்தான் இரவெல்லாம் இன்பம்இன்பம்இன்பம்!

உடல் முழுவதும் நகக்குறியும், பற்கள் பதிந்த அடையாளங்களும் கொண்டவளாய் பிரிந்து செல்வாள்! அவள் தோழிகள் அந்த அடையாளங்களைப் பார்த்து கேலி செய்வர்! நாணத்தால் நிலம் நோக்குவாள்!

நீராடும் போது அந்த அடையாளங்களை மறைக்க நீரிட்டுத் தேய்ப்பாள்! மறையாதுதோழியர் கேலி செய்வர்! போலியாகக் கோபங் கொள்வாள்! இது அவளுக்கு வாடிக்கை!

அவள் நெஞ்சம் அறிந்த தோழி மலர்விழி, ‘ஏன் இப்படி சங்கடப் படுகிறாய்? பெண்மையை மென்மையாய் அனுபவிப்பதில்தான் சுகம் அதிகம், என்று அவளிடம் சொல்வதுதானேஎன்றாள்!

நான் என்ன செய்யட்டும்? இப்படி பலர் கேலி செய்யும்படி செய்ததற்க்காக அவரிடம் சண்டை போடவேண்டும் என்றுதான் எண்ணிச் சென்றேன்! அவரைப் பார்த்ததும் என் நெஞ்சம் என்னையும் மீறி அவரிடம் அடிமையாகி விடுகிறதுபிறகு வேறு வழியில்லாது தழுவப் போய் விடுகின்றேன்என்றாள்!

இந்த நிலைக்கு ஆளான மங்கையின் மனநிலையை அறிந்த வள்ளுவப் பெருந்தகை சித்தரிக்கும் காட்சி இதோ!-

‘புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

(ஊடுவேன் என்று எண்ணிக்கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.)
முன்னாள் அமைச்சர். பா.உ.ச.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

தயவு செய்து குறளை விட்டு விடுங்கள்....

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!