புதன், 15 ஆகஸ்ட், 2012

திரும்பி வா!



கொஞ்சம் கவனி!
கொடுத்த வாக்கைக்
காப்பாற்றுவதற்காய் மட்டும்
என்னிடம் வராதே!
புதிய உறவுகளின்
மோகத்தில்
களைப்படையும் போது
இளைப்பாறும் நிழலுக்காக
என்னிடம் வராதே!
ஒவ்வொரு விடியலையும்
ஒரு நதியாக மாற்று
தாகம் தீரும்வரை
மூழ்கி எழு!
என் காதல் ஒருபோதும்
உன்னைக் குற்றப்படுத்தாது-ஆனால்
உன்னுள் இருக்கும்
அன்புச்சுடர்
ஒரு தீப்பிழம்பாகி
என்று உன்னைச் சுடுமோ
உன் உயிர் அணுக்கள்
என்று என்னை
எண்ணி ஏங்கி அழுமோ
அன்று
அவசியம் என்னிடம்
திரும்பி வந்துவிடு!

2 கருத்துகள்:

அனைவருக்கும் அன்பு  சொன்னது… [Reply]

காதல் நிரம்பி
வழிகிறது

வரிகளை படிக்கும் போதே மூழ்கிவிடுகிறோம்
அருமை

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை மு சரளா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!