சீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 டிசம்பர், 2014

அப்பா வேணாம்ப்பா.......




சினிமாவில் எத்தனையோ பரிதாப கதையை பார்த்து இருப்பீர்கள் ஆனால் சமூக நல சிந்தனையோடு வெங்கட்ரமணன் எடுத்த அப்பா வேணாம்பா என்ற படத்தின் பரிதாப கதையைபற்றி கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்

கொஞ்சம் கேளுங்களேன்...
சினிமா என்பது மகத்தான மீடியம் இதன் மூலம் வலுவான கருத்து சொல்லமுடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் பார்த்த பாங்க் வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு சென்றவர்தான் வெங்கடரமணன்.

பத்து பனிரெண்டு ஆண்டு காலம் போராடிய போதும் ஜெயிக்க முடியவில்லை, ஜெயிக்க முடியவில்லை என்பதைவிட ஜெயிக்க விடவில்லை என்பதே நிஜம்.

இவர்கள் என்ன வாய்ப்பு கொடுப்பது நாமே சினிமா எடுப்போம் என்று களத்தில் இறங்கினார். கையில் இருந்தது மூன்று லட்சமும் ஒரு செவன் டி கேமிராவும்தான். இந்த பணத்தில் நாடகம் கூட போடமுடியாது என்றாலும் துணிந்து சினிமா எடுப்பது என்று முடிவு செய்து எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா...

தெருவுக்கு ஒரு குடிகாரர்கள் இருந்தது போய் இப்போது வீட்டுக்கு ஒரு குடிகாரர் இருக்கும் வேதனையான கால கட்டமிது. ஏழைத்தொழிலாளர் முதல் மாணவர் வரை டாஸ்மாக்கிற்கு சென்று காசையும் உடலையும் கரைக்கும் மோசமான சூழல் இது.

குடியால் பல குடும்பங்கள் கண் எதிரே மண்ணாகி கொண்டிருப்பதை பார்த்த வேதனையை, அவர்களுடன் பேசிப்பழகிய அனுபவத்தை விளக்கும் வகையில் எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா படம்.

தியேட்டர் வாடகை தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு டான்ஸ் இல்லை கவர்ச்சி இல்லை மாசலா இல்லை யாருய்யா பார்க்க வருவாங்க என்று சொல்லிவைத்தார் போல எல்லா தியேட்டரிலுமே இவரை விரட்டிவிட்டனர்.

குடியின் கொடுமையை விளக்கும் படம். நியாயமாக பார்த்தால் வரிவிலக்கு கிடைத்திருக்க வேண்டும். பாதிடிக்கெட் கட்டணத்தில் மக்கள் படம் பார்த்து திருந்தி விடப் போகிறார்களே என்று நினைத்தார்களோ என்னவோ வரிவிலக்கு தரவில்லை.

சரி, தலைப்பு தமிழில் வைத்திருக்கிராரே அதற்கு ஒரு தொகை உண்டா என்று கேட்டால் அதைப் பற்றியும் பேச்சு இல்லை.

எதுவும் வேண்டாம் நான் எடுத்த படத்தை மக்கள் பார்த்து தீர்ப்பு சொல்லட்டும் என்று முடிவு செய்தால் தியேட்டர் கிடைக்கவில்லை.

கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமான சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரில் பகல் 11 மணிக்காட்சியாக கடந்த நான்கு நாட்களாக ஒடிக் கொண்டு இருக்கிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாட்கள் ஒடலாம்.

படம் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் வாசலில் நின்று நன்றி சொல்லும் படத்தின் இயக்குனர் நடிகர் வெங்கடரமணனை கண்ணில் நீர்தழும்ப கட்டிப்பிடித்து பாராட்டுகின்றனர். ஆனால் படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கைதான் மிகவும் குறைவாக இருக்கிறது.

நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதன் காரணமாக குடும்பத்தை நட்பை உறவை இழந்து ஈமொய்க்க தெருவிலும் சாக்கடையிலும் கிடக்கும் நிலைக்கு செல்கிறார். பின்னர் திருந்தி திரும்ப பழையநிலைக்கு எப்படி வருகிறார் என்பதுதான் கதை.

குடிசைத்தொழில் அடிப்படையில் படம் எடுத்திருந்தாலும் படத்தின் தரத்தில் எந்த குறையும் இல்லை செலவை குறைப்பதற்காக இவரே நடித்து பாடல் இயற்றி பாட்டுப்பாடி இருக்கிறார். ஆனால் இவரைத்தவிர வேறுயாரும் இப்படி நடித்திருப்பார்களா என்று நினைக்குமளவிற்கு நடித்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

கிட்டதட்ட நான்கு லட்ச ரூபாய்க்குள் படத்தை எடுத்து முடித்தாலும் அதன்பிறகு படமாக வெளியில் கொண்டுவருவதற்குள் பத்து லட்சமாகிவிட்டது. கடன்பட்டும் கஷ்டப்பட்டும் படத்தை தயார் செய்தாலும் எந்த தியேட்டரிலும் இந்த படத்தை ஓட்டுவதற்கு முன்வரவில்லை.

இந்த படத்தை மது குடிப்பவர்கள் மற்றும் மது குடிக்காதவர்கள் என அனைவருமே பார்க்க வேண்டும்.

எப்போதாவது குடிக்கலாம் விழாக்களில் குடிக்கலாம் சந்தோஷத்திற்கு குடிக்கலாம் என்று குடிக்காதவர்களை சுற்றிசுற்றி வந்து கும்மியடித்து குடிக்கவைக்க நடக்கும் முயற்சியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

குடி என்பது ஒரு நோயே அதில் இருந்து விடுபடுவது மிகவும் எளிது எப்படி என்பதை தெரிந்து கொள்ள குடிப்பழக்கம் உள்ளவர்கள் நண்பர்களுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

பத்து லட்ச ரூபாய் செலவில் ஒரு சினிமாவை சுவராசியம் குறையாமல் எடுக்கமுடியுமா என்ற கேள்வியை மனதில் தேக்கி வைத்துக்கொண்டுள்ள கலைஞர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

சம்பாதிக்க துவங்கிவிட்ட மகனிடம் குடியின் பக்கம் போய்விடாதே என்று எப்படிச் சொல்வது என தயங்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்தப் படத்தை உங்கள் ஊர் தியேட்டரில் ஒட்டி உங்கள் ஊருக்கு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறீர்களா ஒரு ஃபோன் போடுங்கள் வெங்கடரமணன் படப்பெட்டியுடன் வந்துவிடுவார்.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் என்று கூட சொல்ல மாட்டேன் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு கூட இந்த படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு நேரிலோ அல்லது போனிலோ ஒரு வார்த்தை பாராட்டுங்கள் காரணம் வெங்கடரமணன் போன்ற போராளிக் கலைஞர்கள் நாட்டுக்கும் நமக்கு தேவை.அவரது போன் எண்: 9444388107.
நன்றி; தினமலர்  

திங்கள், 7 நவம்பர், 2011

கள்ளக்காதல் எனும் கருமாந்திரம்

சென்ற மாததில்தான் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட்டிருந்தேன். ஆனாலும் தொடர்ந்து வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குபவையாகவே இருக்கின்றன. கள்ளக்காதல்கள் தொடர்பான குற்றங்கள் பெருகிவருவது அதிர்ச்சி அளிப்பவையாகவே உள்ளது. 

இதில் மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம் துரோகம் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இந்த மனிதர்களை எந்த வகையில் சேர்ப்பது? கணவன் எங்கோபோய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு எப்படி உறுத்தலே இல்லாமல் சல்லாபிக்க முடிகிறது.

பத்திரிகைகளில் வெளியான இந்த இரண்டு செய்திகளையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ரத்தம் கொதிக்கும்! கணவன் மீது வெடிகுண்டு பதுக்கிவைத்திருக்கும் தீவிரவாதி போன்ற குற்றப்பழியை சுமத்திவிட்டு சிறைக்கு அனுப்பிவிட்டு அப்புறம் கள்ளக்காதலனோடு.... ச்சே... என்ன வாழ்க்கை இது? என்ன பொம்பளை இவள்?

இன்னொரு செய்தியில் 4 குழந்தைகளுக்குத்தாய், ஊனமுற்ற கணவன் உழைப்பது போதாமல் தன் ஒரு சிறுநீரகத்தை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனோடு ஒட்டமாம். எப்படிதான் மனது வருகிறது இவர்களுக்கெல்லாம். நமது சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

நாகர்கோவில் : கொல்லங்கோடு வெடிகுண்டு வழக்கில், மற்றொரு திருப்பமாக கள்ளக் காதலனுடன் பள்ளி ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.

  கொல்லங்கோடு அருகே, பாலவிளையில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதுரையில் அத்வானி வருகையின் போது கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது எனவும், கொல்லங்கோடு போலீசுக்கு மர்மநபர் போனில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் நடத்திய சோதனையில், அந்த வீட்டிலிருந்து டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அருள்கீதன் என்பவரது வீட்டில் குலசேகரம் திருநந்திக்கரையை சேர்ந்த ஜெயகென்னடி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவரது மனைவி விஜி, பாலவிளையில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

ஜெயகென்னடியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் அப்பாவி என்பதை உணர்ந்தனர். அவரது மனைவியை சுற்றி விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அவரது போனை பரிசோதனை செய்த போது, சாமியார்மடத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவரது எண்ணிற்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது.

அவரை கைது செய்தபோது ஆசிரியை விஜியுடன் அவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்தது. ஜெயகென்னடி வெளிநாட்டில் இருந்து, வந்துவிட்டதால் விஜியுடன் கள்ளத்தொடர்பை நீடிக்க முடியாமல் தவித்த ஆஸ்டின் ஜெயராஜ், ஜெயகென்னடியை ஜெயிலில் அடைக்க வெடிபொருட்களை வாங்கி, அவரது வீட்டில் மதில் ஏறி குதித்து மறைத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் விஜியின் கள்ளத்தொடர்பை உறுதி செய்த போலீசார், வெடிபொருளுக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்தனர்.

ஆனால், விசாரணையின் இறுதியில், விஜிக்கு தெரிந்தே வெடிபொருட்கள் வைக்கப்பட்டது உறுதியானதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்காதலன் ஆஸ்டின் ஜெயராஜ், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்த ஜெயச்சந்திர பூபதி, ஆசிரியை விஜி, அவரது தாயார் ரோஸ்லின் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
.
விஜி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
ஆஸ்டின் ஜெயராஜ் என் குடும்பத்துக்கு பல வகைகளில் உதவியுள்ளார். ஆனால், அவருடன் பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த பின், என்னை கண்காணித்ததோடு, சித்திரவதையும் செய்தார். ஆஸ்டினை சந்திக்க விடாமல் செய்தார்.

மீண்டும் வெளிநாடு செல்லும் முடிவை என் கணவர் தள்ளி வைத்ததால், அவரை விட்டு பிரிய முடிவு செய்து, யோசனை செய்து கொண்டிருந்த போது, மதுரையில் அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட செய்தி வெளியானது. எனவே, இதில் என் கணவரை சிக்க வைக்க முடிவு செய்தோம். எனது போனை போலீசார் வாங்கிய போதே, நாம் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து விட்டது. நான் பெரிய துரோகம் (யாருக்கு?)  செய்து விட்டேன். இவ்வாறு விஜி கூறினார்

கணவன் கிட்னியை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு
கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்
சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள மனியாரக்குன்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணன். வயது-35, இவரது மனைவி, பூங்கொடி வயது-32.

இந்த கிருஷ்ணனுக்கு காலில்தான் ஊனம், ஆனால் மனதில் ஊனம் இல்லை போல... அதனால் மனம் போன போக்கில்... கணவன் மனைவி இருவரும் .
செல்வராணி வயது-15, அழகுராஜ் வயது-13, பாலமுருகன்-10, முடியரசன், வயது-5 என இந்த தம்பதிகளுக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பெற்று தள்ளிவிட்டனர்.
கிருஷ்ணன் கருமந்துரையில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில வேலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று சேலம் மாவட்ட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நான் கருமந்துரையில் வசித்து வருகிரேன், என்னால் கடுமையாக உழைத்து வேலை செய்ய முடியாது, அதனால் ஓட்டல கடையில் வேலை செய்து வருகிறேன்.
 

என்னுடைய சம்பாத்தியம் குடும்ப செலவுக்கு பத்தாத போதும்,.  என்னுடைய மனைவியை நான் எங்கும் வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்திருந்தேன், இரண்டு வருடம் முன்னர் எனக்கு தெரிந்த ஜான் என்பவரிடம் எனது கிட்னியை ஐம்பது ஆயிரத்துக்கு விற்று, அந்த  பணத்தையும் எனது மனைவியிடம் கொடுத்திருந்தேன்.
என்னுடன் ஓட்டல் கடையில்சரக்கு மாஸ்டராகஇருந்த ராயப்பன் என்கிற ரவியை வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப்போனேன், அவனுக்கும் எனது மனைவி பூங்கொடிக்கும் கள்ள தொடர்புஏற்பட்டு விட்டது. இதை நான் பலதடவை கண்டித்தேன்.

கடந்த நான்கு மாதம் முன்னர், எனது மனைவி பூங்கொடி, ராயப்பன் இருவரும் நான் வைத்திருந்த பணம், எனது ரேஷன் கார்டு, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், எனது அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து நான், கருமந்துறை மற்றும் ஏத்தாப்பூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துல்ளேன், ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய ரேஷன் கார்டு  கூட என்னிடம் இல்லாமல் இருப்பதால் நான் சாப்பாட்டுக்கு கூட அரிசி  வாங்க கூட முடியாமல் நான்கு குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன்.

கிட்னியையும் விற்று விட்டதால், என்னால் இப்போது வேலையும் செய்ய முடியவில்லை... அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய எனது மனைவி பூங்கொடியை கண்டுபிடித்து எனது பணத்தையும், ரேஷன் கார்டையும் மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்குக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம்.