பனிமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனிமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூலை, 2013

பனி விழும் மலர் வனம்.......

இயற்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. காணக் கண் கோடி வேண்டும். அப்படி பார்க்க வேண்டிய ஆசை இருந்தாலும் உலகின் எல்லா மூலைகளுக்கும் நம்மால் பயணிக்க முடியாது. நம் பக்கத்தில் இருக்கும் ஊரையோ, கோவிலையோ, மலையையோ, இடத்தையோ பார்க்க முடியாத நம்மால் எப்படி வெளிநாடுகளில் இருக்கும் இயற்கை அழகை கண்டு களிக்கவோ ரசிக்கவோ முடியும்?

ஒரே வழிதான் உண்டு! அதுதான் புகைப்படத்திலோ அல்லது திரைப்படத்திலோ காண்பது! தெற்கு சீனாவின் ஒரு பகுதியில் 'பனி மழை'க்குப் பிறகான ஒரு ரம்மியமான நேரத்தில் ஒரு மலர் வனத்தில் எடுக்கப்பட்ட மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள் இவை!

இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது 'பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்', என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் போகாது இல்லையா?