பூக்களுக்கு சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு-
புன்னகையை கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – நான்
தூரத்தில் இருந்தால்தான் உனக்கு
புன்னகையே வரும் என்று!
படைத்தவனுக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு பார்க்கக் கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரையும் பார்க்கிறாய் என்று!
பைங்கிளிக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு –
பேசக் கற்றுக் கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரிடமும் பேசுகிறாய் என்று!
ஏன்?
என்னைக் கண்டதால் மயக்கமா?
உன்னை இழந்து விடுவாய் என்ற
தயக்கமா?

நல்ல கவிதை!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி ஞானசேகரன்!
பதிலளிநீக்கு