வியாழன், 24 ஜனவரி, 2013

டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி!



நெஞ்சமே அஞ்சாதே நீ…
என் வாழ்க்கையில் பிடிப்புள்ள மனிதனாகவும், நேர்மையாளனாக வாழவும் எனக்கு எனது பெற்றோர்களைவிடவும், எனது ஆசிரியர்களைவிடவும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள்தான். இத்தனைக்கும் அவரை அவரது ‘மக்கள் சக்தி இயக்கம்’ தொடர்பாக ஒரே ஒருமுறைதான் சந்தித்து இருக்கிறேன்.

90 களில் அவரது முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் ‘கல்கி’க்கு எழுதி முகவரியைப் பெற்றேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே அவரின் நூல்களை வாசிக்கத்தொடங்கியிருந்தேன் என்பதை நினைக்கும்போதே மறக்க முடியாத அந்த நினைவுகள் அசைபோடத் துவங்கிவிடுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கல்யாணமாகிப்போன எனது பள்ளித்தோழிக்கு ‘எண்ணங்கள்’ என்ற புத்தகத்தை பரிசளித்து, அவளது புதிய கணவனின் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.

பின்னாளில் தொழிற்கல்வி படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வில் (இணையம் பரிச்சயமில்லாத காலம்) உன்னுடைய பொழுதுபோக்கு என்ன என்ற கேள்விக்கு புத்தகம் படிப்பது என்ற பதிலை அடுத்து யாருடைய புத்தகம் என்ற கேள்வி வந்தபோது தயக்கமில்லாமல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்று சொன்னது இப்போதும் மறக்கவில்லை.

வெளிமாநிலத்திலே வாழ்ந்து வந்தாலும், கடந்த டிசம்பர் இறுதியில் தமிழ்நாடு வந்தபோது ஏனொ இருக்கட்டும் என் பழைய புத்தகங்களைத்தேடி இவரின் ‘நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்ற புத்தகத்தை கையோடு எடுத்து வந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு பலமுறை படித்த அந்த புத்தகத்தை மீண்டும் படிக்க ஆவலாய் கொண்டுவந்தேன். ஆனால் நேரமின்மையால் புத்தகத்தை பிரிக்ககூடவில்லை. அதை பிரித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவரது மரணச்செய்தி.

ஓய்வில்லாத உழைப்புக்கிடையே இணையத்தில் கூட உலா வரமுடியவில்லை. நாளிதழ்களையும் படிக்க இயலவில்லை. தற்செயலாய் ஜோதிஜியின் ‘தேவியர் இல்லம் திருப்பூர்’ வலைப்பக்கத்தைப் பார்த்தவுடன்தான் அவரது மரணச்செய்தியை அறிய முடிந்தது.

அந்தக்காலத்தில் என்னைப்போல லட்சிய வேகம் கொண்ட இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்சநாயகன் இவர். அப்போது நானும் கூட மக்கள் சக்தி இயக்கதை எங்கள் பகுதியில் ஆரம்பிக்க மிகுந்த உத்வேகமாயிருந்தேன். பணி நிமித்தமாய் வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூரு சென்றுவிட்ட காரணத்தினால் அப்போது என்னால் அதில் பங்கெடுக்க முடியாமல் போனது.

என் வீட்டு நூலகத்தில் நான் முதன்முதலாக வாங்கிய புத்தகங்கள் இவரின் ‘எண்ணங்களும்’ ‘நெஞ்சமே அஞ்சாதே நீ’யும்தான். வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போதெல்லாம் இவரது புத்தகங்கள் தான் எனக்கு அருமருந்து.

நதி நீர் இணைப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் அசாதாரணமானது. மகாநதி கோதாவரி கிருஷ்ணாவை காவிரியுடன் இணைக்கும் திட்ட அறிக்கையை 1991 ல் அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வரை சென்று தனது திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறியும் எந்தப்பலனும் இல்லாமல் போனது நமது துரதிஷ்டமே. தமிழகத்தில் வந்த்த அடுத்தடுத்த திராவிடக் கட்சிகளும் அவரை கண்டுகொள்ளாமலிருந்ததும் வெட்கக்கேடான விஷயமே!

தென்னக இரயில்வேயின் ஓய்வு பெற்ற திட்டப்பொறியாளர் வேலூர் திரு. நீ.நடராஜன் அவர்கள் எழுதிய ‘கோதாவரியை வரச்செய்வோம் காவிரியுடன் இணைத்திடுவோம்’ என்ற நூலுக்கு இவர் எழுதிய ‘அணிந்துரை’ காரணமாகவே அந்த புத்தகத்தை வாங்கி நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வையை அப்போதே பெற்றேன் என்பதை பொருமையுடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த இளைஞருக்கு 80 வயது என்பதை நம்பவே முடியவில்லை. நிறைய எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. ஆனால் நேரம் பதினொன்றைக் காட்டுகிறது. எனவே அந்த பெருமகனாருக்கு, அந்த லட்சியத்தலைவருக்கு எனது உளமார்ந்த அஞ்சலியை இந்த பதிவின் வழியே சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

எம்.ஜி.ஆர். 1948 ல் தன் ரசிகனுக்கு எழுதிய கடிதம்!

எம்.ஜி.ஆரின் மருமகன் மயிலை விஜயகுமார் (விஜயன்), எம்.ஜி.ஆர். பவளவிழா நினைவுமலர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பொது மக்களிடமிருந்து அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அவரைப் பற்றிய துணுக்குகளையும் பெறுவதற்காக ஒரு விளம்பரம் செய்தார். அப்போது அப்படி வந்த பல நினைவுப் பொருட்களில் 1948 ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தன் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் ஒன்று.
பி.ஜி.எம். செல்வராஜ் என்கிற நண்பருக்கு எம்.ஜி.ஆர். எழுதிய பதில் கடிதம் இது. அப்போது அவர் எழுதிய அந்தக் கடிதம், இப்போதும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவர்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளதுதான் ஆச்சர்யம்!

அந்தக் கடிதம் கீழே!
எம்.ஜி.ராம்சந்தர்.                                                   கேம்ப்; கோவை.                           நாள்; 19.02.1948


அன்புள்ள சகோதரர் பி.ஜி.எம்.எஸ். அவர்கட்கு, நலம். நலங்காண ஆவல். கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி.


தங்களை இதற்குமுன் சந்தித்ததுண்டா என்று நன்கு நினைவில்லை. ஆனால் கடிதத்தில் உள்ள தங்கள் முகம் மட்டும் அறிமுகமானதாகத்தான் தெரிகிறது. அது எப்படியோ இருக்கட்டும். என் மனதிலுள்ள சில விஷயங்களை உங்களுக்கு கட்டாயம் எழுத வேண்டியிருப்பதற்காக உண்மையில் வருத்தமேயாயினும் தங்கள் கடிதத்திலிருந்து எனக்குண்டான கடமை என்னை எழுதும்படி தைர்யப் படுத்துகிறது.


சோதரா! தங்களுடைய கடிதத்திலிருந்து தங்களுடைய வாழ்க்கை கௌரவத்துடன் மனிதனாக வாழத்தகுதியுள்ள சௌகர்யங்களுடன் கூடிய ஒன்றாக இருக்குமென்று தெரிகிறது.


முதலாவதாக, சினிமாவிலிருக்கும் எல்லா நடிக நடிகையர்களும் உயர்வானவர்கள், நிறைய பண வசதியுள்ளவர்கள், கருணையுள்ளவர்கள், சுயநலமற்றவர்கள் என்று எந்த நிமிடத்திலும் தவறிக்கூட நினைத்துவிட, நம்பிவிடக் கூடாதென்பது என் எச்சரிக்கை!


அன்பரே! தாங்கள் சினிமாவில் நடிக்கவேண்டுமென்று விரும்புவதற்கு அடிப்படையான காரணங்கள் என்னென்ன? பணத்திற்கா? புகழிற்கா?? கலைக்கா???


பணத்தை உத்தேசித்தாயின் தற்கால (தமிழ்) சினிமா உலகத்தில் மிகச்சிலரைத் தவிர மற்ற எல்லோரும் பரிதாபப்படத்தக்க நிலையில்தான் பணத்தைப் பெறுகிறார்கள் என்பதை என் அனுபவத்திலிருந்து நன்கு அறிந்திருப்பதால் அதை உத்தேசித்து சினிமாவில் சேர விரும்புவது சரியல்ல.


புகழை உத்தேசித்தாயின் எந்தப் புதிய நடிகனும் சீக்கரத்தில் (அதாவது சில விசித்திரமான காரணங்களால் அல்லாமல்) புகழடைந்ததில்லை. என் சரித்திர அனுபவம் (நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து குறைந்தது 12 வருடங்களாகின்றன) உங்களுக்கு பாடத் தெரிந்திருப்பின் ஒருவேளை சீக்கிரத்தில் புகழடையலாம். (ஆனால் அதுவும் இரண்டாம் பட்சம்தான்).


கலையை உத்தேசித்தாயின் எப்படிப்பட்டது கலையென்று இதுவரை தீர்மாணிக்கப்படவே இல்லை. ஏனெனில் சில படங்கள் பாட்டிற்காகவும், சில சண்டைக்காகவும், சில தந்திரக்காட்சிகள் நிறைந்ததற்காகவும் இன்னும் இப்படிப்பட வெவ்வேறு காரணங்களைக் கொண்டும் நன்கு ஓடுகிறது. ஆனால் யாரும் இம்மாதிரி காரணங்களைக்கொண்டு வெற்றியடையும் படங்களை கலை நுணுக்கம் வாய்ந்த படங்கள் என்று ஒத்துக்கொள்வதே இல்லை.


சினிமாவில் சொல்லுவது போல் டெக்னிக் நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பட்ட, நினைக்கப்பட்ட படங்கள் பெட்டியில் தூங்குகிறது. இதற்குக் காரணம் மக்களின் ருசி கோளாரா? அல்லது எடுக்கப்படும் (கலையென்று சொல்லும்) முறையின் கோளாரா? இவ்விரண்டில் எந்த முடிவுக்கு வந்தாலும் தற்சமயம் நம்மால் கலையைக் காணமுடிவதில்லை.


ஆக, நான் நினைத்த காரணங்கள் எதுவும் எந்த விதத்திலும் தங்கள் சினிமா பிரவேசத்துக்குப் பொருத்தமே இல்லை. ஆனால் நான் எந்த விதத்தில் தங்களுக்கு உதவமுடியுமென்றால் தங்களுக்கு தெரிந்த பணவசதியுள்ளவர்கள் படமெடுக்க முயன்றால் தங்களை நடிக்க வைக்க, தாங்கள் வெற்றியடைய நான் உதவியாயிருக்க முடியும்.


ஆனால் தாங்கள் கதையைத் தேர்ந்தெடுக்குமுன் தங்களுக்கு பொருத்தமான வேடமுள்ள கதைதானா என்பதை நன்கு ஆலோசித்து தீர்மாணித்த பிறகே கதையை முடிவு செய்ய வேண்டும். நடிப்பென்பது ஓரளவு ஒருவர் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான் என்றாலும் அது இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை எத்தனை விதமான உணர்ச்சிகளுடன் கூடிய மனிதர்களையும், நம் மன உணர்ச்சிகளை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றக்கூடிய நிகழ்ச்சிகளையும் காண்கிறீர்கள்.


ஓர் உதாரணம்; ஒரு குழந்தை விளையாட்டின் மேல் உள்ள ஆர்வமிகுதியால் தெருவின் குறுக்கே ஓடுகிறது. அதே சமயம் தெருவில் வேகமாக லாரி வந்துவிடுகிறது. உடனே நீங்கள் உங்களையும் மறந்து கூச்சலிடுகிறீர்கள். அல்லது பயத்தினால் தூண்டப்பட்டு குழந்தையைக் காப்பாற்ற ஓடுகிறீர்கள். இதைப்போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடிப்பின் (நடிப்புக் கலையின் ) ஒவ்வொரு பகுதியேதான்.


ஆகையால் அன்பரே! (நடிப்பின் ஓரளவு கூட தெரிந்துகொண்டிராத) என் போன்றோரிடம் கற்றுக்கொள்ள முயலுவதைவிட, தாங்கள் காணும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மனதில் பதிய வைத்து, அந்தந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டவர்களின் உணர்ச்சிகளைப் பார்த்து குறித்துக்கொண்டு தனியாக கண்ணாடி முன் நின்று பழகி (அதாவது தாங்கள் கற்பனை செய்யும் சம்பவத்திற்கும் தாங்கள் நடிப்பதற்கும் பொருத்தமுண்டா? தாங்கள் நேரில் கண்ட முக பாவத்திற்கும் தற்சமயம் தாங்கள் செய்து பார்க்கும் பாவத்திற்கும் பொருத்தமுண்டா என்பதை) பார்த்துக்கொண்டால் நாளடைவில் நடிப்பில் வெற்றியடையலாம். இத்துடன் முக்கியமானது ஒழுக்கம்.


இந்த ஒழுக்கத்தை தற்கால சினிமா உலகில் எல்லோரிடமும் காணமுடிவதில்லை. அதுமட்டுமில்லஒழுக்கம் என்பது வெறும் கேலிக்கூத்து என்று கூட நினைக்கும், பேசும், நடக்கும் நடிக நடிகையர்களும் இருக்கிறார்கள் என்பதை நடிகர் என்ற முறையில் தலைகுனிவுடன், வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆர்வமுள்ள நேர்மையுள்ள தங்களைப் போன்ற வாலிபர்கள் நடக்கத் தீர்மானித்தால் தற்காலம் உள்ள இந்த இழிவான  நிலையை மாற்றி நிச்சயம் வெற்றி காண முடியும். ஆகவே தாங்கள் சினிவில் நுழைவதன் முன் ஒழுக்கத்தைப் பற்றி நன்கு உணர்ந்து தாங்கள் எங்கிருந்தாலும் அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளச் சிறிதும் தவறக்கூடாது.


ஆகையால் தாங்கள் தயவு செய்து நன்கு யோசித்து சினிமா நுழைவைத் தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு சினிமாவில் சேர்த்துவிடுவதாகச் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட அன்பர்களிடம் தாங்களோ தங்களைப் போன்ற நண்பர்களோ சிக்காமல் பார்த்துக்கொள்ளத் தவற வேண்டாம்.


இப்படிக்கு,


தங்கள். எம்.ஜி.ராம்சந்தர்.

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் வாழ்த்து!





பதிவுலகத் தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த 'பொங்கல்' வாழ்த்துக்கள்!


நட்புடன்,

வெள்ளி, 11 ஜனவரி, 2013

முத்து முத்தான வரிகள்!



அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது. வாழ்த்து அட்டை மற்றும் உங்கள் குடும்ப புகைப்படம் இரண்டும் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். உங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கு என் நன்றியை முதலில் அர்பணித்துக்கொள்கிறேன். காரணம் எனக்கு யாருமே வாழ்த்து அனுப்பவில்லை. உங்களுடைய வாழ்த்தும், கவிதாவுடைய வாழ்த்தும் மட்டும்தான் எனக்கு வந்தது.

உங்களின் நட்பு கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களோ, ஏன் என் கணவர் கூட எனக்கு ஒரு கடிதம் போடுவதில்லை. ஒரு அனாதை போலத்தான் நான் இங்கு ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு வந்தேன். உங்களின் கடிதம் வரத்தொடங்கியதிலிருந்துதான் நான் சற்று ஆறுதலாக உள்ளேன். உங்களின் கடிதம் உண்மையிலேயே ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. காரணம் எனக்கு மூன்று அண்ணன்கள். இரண்டு அக்காமார்கள். இருந்தும் யாருடைய கடிதமும் இந்த இரண்டு வருடத்தில் வந்ததில்லை! என் குடும்பத்திலிருந்து இப்படி யாரும் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. ஆனால் உங்களை நான் பார்த்ததே இல்லை. கடிதம் மூலம்தான் அறிமுகம். அப்படி இருந்தும் என் கடிதத்திற்கு பதிலும் எழுதி எனக்கு நல்ல அறிவுறையும் ஆலோசனையும் சொல்லி எழுதியிருப்பது உண்மையிலேயே எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

கடிதத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்தேன். அவ்வளவு முத்து முத்தான வரிகள். எனக்கு கடிதம் எழுதுவதற்கு உங்களுக்கு பலகோடி நன்றிகள்! நான் தற்சமயம் சில மனவேதனைகளோடுதான் உள்ளேன். எல்லாவற்றிற்கும் காரணம் என் கணவர். இதுவரைக்கும் அவருக்கு பொறுப்பு என்பதே கிடையாது. என்னால் முடிந்த அளவு சம்பாதித்தேன். ஆனால் எல்லாமே நஷ்டமாயிற்று. நான் சம்பாதித்து ஒன்றரை லட்சம் பணம் கட்டி வேலை வாங்கிக்கொடுத்தேன். அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் இந்தியா வந்துவிட்டார். தற்சமயம் ஆட்டோ வாங்குவதற்கும் பணம் அனுப்பிக்கொடுத்து வண்டியும் வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அங்கு வந்துவிடு என்று அழைக்கிறார். அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டவள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டேன். மறுபடியும் இரண்டு வருடம் வேலை செய்யலாம் என்று தீர்மாணித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் பணம் இருந்தால்தான் மதிப்பு என்பது உங்களுக்கே தெரியும்.


என் குடும்பத்திற்கு முன்னால் நான் நல்லபடியாக வாழ்ந்து காட்டவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் என் கணவர் அதற்கு ஆதரவாக இல்லை. தற்சமயம் அவர் ஆட்டோ ஓட்டுவதால் எனக்கு ஒரு கடிதம் போடவோ அல்லது என்னைப்பற்றி நினைப்பதற்கோ நேரம் இல்லை. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பணம் வேண்டும் என்றால் மட்டும்தான் எனக்கு ஃபோன் செய்வார் அல்லது கடிதம் போடுவார். என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி. இவை எல்லாவற்றையும் நான் சகித்துத்தானே ஆகவேண்டும். காரணம் நானே தேர்வு செய்த மாப்பிள்ளை! அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்கிறேன்.

புதுவருடம் (டிசம்பர்31 இரவு) 12 மணிக்கு என் கணவரிடம் பேசலாம் என்று ஃபோன் செய்தேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. என் மகளிடம் மட்டுமே பேசினேன். மகளோ 'மம்மி' உடனே ஊருக்கு வாருங்கள் என்கிறாள். எப்படியும் கூடிய சீக்கிரம் நான் சென்னை வருவேன். ஆனால் மீண்டும் இங்கு வருவதாகத்தான் முடிவு.

என் கதையைப் பற்றியே நிறைய எழுதிவிட்டேன். உங்களுடைய குடும்ப புகைப்படம் மிக அழகாக உள்ளது. பிள்ளைகளும் அழகு. இரண்டு கண்மணிகள் என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள். புது வருடத்தில் கடவுள் நல்ல அனுக்கிரஹம் தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். மற்றபடி கவிதா பெயரில் நீங்கள் அனுப்பிய வாழ்த்தும் கிடைத்தது. கவிதா வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாளா? நான் கேட்டதாகச் சொல்லவும். மறுபடி அந்த ஜகந்நாதனைப் போய் பார்த்தீர்களா? ஏதாவது விபரம் தெரிந்ததா?


மற்றபடி நீங்கள் எழுதினது போலவே சிங்கப்பூரில் மிகப் பிரமாண்டமாக புத்தாண்டு விழா கொண்டாடப்ப்பட்டது. 5 லட்சம் பேர் கலந்துகொண்ட விழா அது. நான் போகவில்லை. தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பியதால் நான் வீட்டிலிருந்தபடியே விடிய விடிய கண்டுகளித்தேன். விடியற்காலை நான்கு மணிக்குத்தான் தூங்க்கப்போனேன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்தில் மிக அருமையாக ஓவியம் வரைந்த உங்கள் குடும்ப நண்பர் ஜெயந்திக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மனைவியையும் நான் ரொம்பவே விசாரித்ததாகச் சொல்லவும். கூடிய சீக்கிரம் சென்னை வருவேன். உங்களைக் காண ஆவலோடு வருவாள் இந்த ஜென்ஸி. இன்னும் எனக்கு தொடர்ந்து மடல் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த மடலை முடிக்கிறேன்.

WISH YOU A HAPPY NEW YEAR 2000

MAY GOD BLESS YOUR FAMILY, PLEASE PRAY FOR ME.

இப்படிக்கு,

என்றும் நட்புடன்,

ஜென்ஸி, சிங்கப்பூர்.


வியாழன், 10 ஜனவரி, 2013

வலைச்சரம் அறிமுகத்தில் மறக்க முடியாத நினைவுகள்

நான் பதிவுலகில் காலடி வைத்தபோதே எனக்கு அறிமுகமானது வலைச்சரம். ஏதாவது ஒரு தளத்திற்குச் சென்றால் முகப்பில் இருக்கும் பதிவை மட்டுமே படிப்பதில்லை. அங்கே உள்ள இணைப்புகளுக்கெல்லாம் செல்வேன். அதிலுள்ள பழைய பதிவுகளையெல்லாம் படிப்பேன். இப்படித்தான் தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி, திரட்டி, வலைச்சரம் என திரட்டிகளெல்லாம் எனக்கு அறிமுகமாயின.  இதிலிருந்து எனக்கு தேவையான அல்லது விருப்பமான பதிவுகளை மட்டும்தான் தேர்வு செய்து படிப்பது வழக்கம். மற்றொரு வழியிலும் மற்ற தளங்களுக்குச் செல்வதுண்டு. அது நமது தளத்திற்கு வந்து படித்து பின்னூட்டமிடுபவர்களின் முகவரி வழியே சென்று படிப்பது.  

வலைச்சரம் எனக்கு மிகவும் பிடித்தமான தளம். அது பதிவர்களையே வாரத்திற்கு ஒருவரை ஆசிரியராக பணி செய்ய அழைப்பது. மிகப்பிரபலமான பதிவர்களுக்குத்தான் அதில் வாய்ப்பு என முதலில் எண்ணியிருந்தேன். அப்புறம் சில பதிவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களை மட்டுமே அங்கு அறிமுப்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். தொடர்ந்து வாசிப்பதிலிருந்துதான் தமக்குப்பிடித்த சுவாரஸ்யமான வலைப்பதிவுகளை / பதிவர்களை மற்ற எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியே வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.  

திரட்டிகளில் பகிர்வதோடு என் கடமை முடிந்தது என நினைத்திருந்த வேளையில் வாசகர்களின் வருகை ஒரு கிறக்கத்தைத் தந்தது. ஒருநாளில் இத்தனைபேர் வந்து படிக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. வெறும் நூற்றுக்கணக்கில் வருவதற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால் ஆயிரக்கணக்கில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். நல்ல பதிவுகள் என்றால் தன்னால் வாசகர்கள் வருவார்கள் என்பதை அறிந்து கொண்டபின்புதான் நான் எழுதவே ஆரம்பித்தேன். இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாம் என்னுடையதே இல்லை. எனக்கு என் நண்பர்கள் எழுதிய பழைய கடிதங்களே! சில இணையத்தில் கிடைத்த நகைச்சுவையான புகைப்படங்கள்.

 இத்தனைக்கும் சக பதிவர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டமிடுவதும் மிகக்குறைவு. காரணம் பணிச்சூழல். முதன் முதலில் 'மகிழம்பூச்சரம்' சாகம்பரி அவர்கள்தான் என் வலைப்பதிவை வலைச்சரத்தில் (31.10.2011 - 06.11.2011) அறிமுகப்படுத்தினார். இணைப்பு; வலைச்சரத்தில் மறக்க முடியாத நினைவுகள்). அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து  உஷா அன்பரசு அவர்களால் வலைச்சரத்தில் (24.12.2012 - 30.12.2012) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இணைப்பு; வகுப்பு-இரண்டாம் நாள்.

10) மறக்க முடியாத நினைவுகள்
 என்று சொல்லும் கவிப்ரியன்
கடிதங்களை சுவாரஸ்யமாக திரைக்கதைப் போல் நகர்த்துகிறார்.
 

அதற்கு அடுத்த வாரத்திலேயே (புத்தாண்டின் முதல்வாரத்திலேயே) பலராலும் மிகவும் அறியப்பட்ட 'தேவியர் இல்லம் திருப்பூர்' ஜோதிஜி அவர்களால் (31.12.2012 - 05.01.2013) மீண்டும் வலைச்சரத்தில் எனது பதிவு அறிமுகமானது. இணைப்பு;  ஜோதிஜி 7 வது நாள்- விதைகள் மலடா?


தமிழ்நாட்டை விட்டு வேறொரு மாநிலத்தில் வேலை நிமித்தமாக உயர் பதவியில் வசிக்கும் இவர் அக்கறைபோடு பகிர்ந்து கொள்வதை படித்துப் பாருங்க.  நேரமில்லை என்பது ஒரு பொய்ச் சாக்கு என்பது மனதிற்கு தெரியும் தானே?



இது போன்ற தளங்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்க.  நாம் இருப்பதை விட்டு விட்டு எத்தனையோ தேவையில்லாத விசயங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பது புரியும்.

தினந்தோறும்  வலையுலகில் உலவும்போது கண்ணில்பட்ட மிக முக்கியமான வலைப்பதிவு இந்த ஜோதிஜியின்  'தேவியர் இல்லம் திருப்பூர்'. ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவரது தளம். இவரது நட்பு கிடைத்ததையே பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கௌரவித்திருக்கிறார்.

என் பதிவுகள் குறித்து எனக்கே திருப்தியில்லை. எழுத எண்ணமிருந்தும் நேரம் கைகொடுப்பதில்லை. கடந்த காலங்களில் என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைத்தான் பதிவிட்டு வருகிறேன். இந்த அறிமுகங்கள் என்னை சோம்பலிலிருந்து விடுபட்டு உற்சாகமாய் எழுத ஊக்குவிக்கின்றன. இனியாவது எழுத ஆரம்பிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய இருவருக்கும் மனமார்ந்த நன்றி!

உடனுக்குடனே என்னால் பதிவிடமுடியவில்லை. ஒரிசாவில் ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒன்றின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் அப்போது நன்றி தெரிவிக்கக் கூட முடியவில்லை. கடந்த 5 ம் தேதி விழா இனிதே முடிந்தது!

தொடர்புடைய இடுகை; வலைச்சரத்தில் மறக்க முடியாத நினைவுகள்.

திங்கள், 7 ஜனவரி, 2013

இந்தியா vs சீனா



        India
           China

  CURRENT GFP  RANK
 

4
 

2
Total Population
1,147,995,904
1,330,044,544
Military Manpower Available
584,141,225
729,323,673
Fit for Military Service
467,795,073
609,273,077
Reaching Military Age Yearly
22,229,373
20,470,412
Active Military Personnel
1,325,000
2,255,000
Active Military Reserves
1,155,000
800,000
Active Paramilitary
1,293,300
3,969,000
Total Air-Based Weapons
1,007
1,900
Total Land-Based Weapons
10,340
31,300
Total Naval Units
143
760
Towed Artillery Systems
4,175
14,000
Merchant Marine Strength
501
1,822
Major Ports and Terminals
9
8
Aircraft Carriers
1
1
Destroyers
8
21
Frigates
16
42
Submarines
18
68
Patrol Coastal Craft
43
368
Mine Warfare Craft
12
39
Amphibious Operations Craft
7
121
Defense Budget / Expenditure
$32,350,000,000
$59,000,000,000
Foreign Reserves
$275,000,000,000
$1,534,000,000,000
Purchasing Power
$2,966,000,000,000
$7,099,000,000,000
Oil Production
810,000 bbl
3,725,000 bbl
Oil Consumption
2,438,000 bbl
6,930,000 bbl
Proven Oil Reserves
5,700,000,000 bbl
12,800,000,000 bbl
Total Labor Force
516,400,000
800,700,000
Roadway Coverage
3,316,452 km
1,930,544 km
Railway Coverage
63,221 km
75,438 km
Waterway Coverage
14,500 km
124,000 km
Coastline Coverage
7,000 km
14,500 km
Major Serviceable Airports
346
467
Square Land Area
3,287,590 km
9,596,960 km